Header Ads

Header ADS

அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி

 


அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி

ஒரு அம்மா கோபத்தில் குழந்தயை அடித்து "பக்கதுல வராத போ" என்று பிடித்து தள்ளினால் அந்த குழந்தை என்ன செய்யும் திரும்பவும் , அம்மாவின் இரண்டு கால்களையும் அணைத்துக் கொண்டு அழும். 

குலசேகர் ஆழ்வார் பெருமாளிடம் சொல்கிறார், நீ எனக்கு என்ன துயரத்தை தந்தாலும் , அடிக்கும் அம்மாவின் கால்களைக் கட்டிக்கொண்டு அழும் குழந்தை போல உன் அருளுக்காகவே ஏங்குவேன்.

விரை என்றால் நறுமணம் ,- வித்துவக்கோடு என்பது ஊர்பெயர், குழவி என்றால் குழந்தை


தரு துயரம் தடாயேல்  உன் சரண் அல்லால் சரண் இல்லை* 

விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்  வித்துவக்கோட்டு அம்மானே*

அரி சினத்தால் ஈன்ற தாய்*  அகற்றிடினும்*  மற்று அவள்தன் 

அருள் நினைந்தே அழும் குழவி*  அதுவே போன்று இருந்தேனே

No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.