நாலு வரியில் சுந்தரகாண்டம்
சுந்தர்காண்டத்தின் சுருக்கம் நாலு வரியில் கம்பன் எழுதியது. மிகவும் புகழ் பெற்ற பாடல். எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். சுந்தரகாண்டத்தை முழுவதும் படிப்பது சிறப்பு. வாய்ப்பு இல்லாதவர்கள் தினமும் இந்தப் பாடலை சொல்லலாம். நிச்சம் அனுமான் நம்மை காப்பார்.
----------------------------------------------------------------------
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
------------------------------------------------------
அஞ்சிலே ஒன்று பெற்றான் - ஐம்பூதங்களில் ஒன்றான வாயு பெற்ற மகன்
அஞ்சிலே ஒன்றைத்தாவி -- ஐம்பூதங்களில் ஒன்றான நீரை (கடலை) தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக --- ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயம் வழயியாக (ஆறு என்றால் வழி)
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்குகண்டு --- ஐம்பூதங்களில் ஒன்றான பூமி பெற்ற அணங்கை( அணங்கு என்றால் பெண் தெய்வம்) கண்டு
அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் --- ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பை அயலார் (அந்நியர்கள்) ஊரில் வைத்தான்
அவன் எம்மை அளித்துக் காப்பான் --அவன் என்னை வேண்டியவற்றை அளித்து காப்பாற்றுவான்.

No comments